மாவனெல்லையைச் சேர்ந்த 21 வயது விமானப் பயிற்சி மாணவர் மொஹமட் ரிபாய் மொஹமட் சுஹைல், இன்ஸ்டாகிராமில் இஸ்ரேலியக் கொடி மிதிக்கப்படும் வீடியோவைப் பதிவேற்றியதற்காக இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கடந்த ஒன்பது மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பிபிசி சிங்களச் செய்தி தெரிவிக்கிறது.
கடந்த 2024 அக்டோபரில், தேசிய அடையாள அட்டையை வைத்திருக்காத காரணத்தால் தெஹிவளை பொலிஸாரால் இஸ்ரேலிய தூதரக வளாகம் அருகே கைது செய்யப்பட்ட சுஹைல், பின்னர் அடையாள அட்டை சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.
எனினும், முன்பு நீதிமன்றம் அவரை பிணை இன்றி விடுவித்திருந்த போதிலும், இன்ஸ்டாகிராம் வீடியோ தொடர்பாக அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு PTA சட்டத்தின் கீழ் தடுப்பில் வைக்கப்பட்டார்.
அவரது வழக்கறிஞர், இதுவரை முறையான குற்றச்சாட்டுகள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், பொலிஸார் குற்றத்திற்கான ஆதாரங்களை முன்வைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணையத்திற்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், சுஹைலின் குடும்பத்தினர் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்.
நீண்டகால தடுப்பு மற்றும் குற்றச்சாட்டு இல்லாத நிலை குறித்து உரிமைகள் குழுக்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, இந்த வழக்கு புதன்கிழமை (ஜூலை 9) இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப் படவுள்ளது.
0 Comments