மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்குச் சென்ற இளைஞர் குழுவை ஏற்றிச் சென்ற வேனொன்று இன்று (10) பாதையை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்ததில் எட்டு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





ஹட்டன் – நுவரெலியா பிரதான பாதையில் நானுஓயாவிலுள்ள டெஸ்போட் பகுதியில் இன்று (10) அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்துள்னதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





வேனின் சாரதி தூங்கியதன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் வேனும் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்